Tuesday, May 21, 2024
Home » விக்கிரவாண்டியை சேர்ந்தவர் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்

விக்கிரவாண்டியை சேர்ந்தவர் திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் மாயம்

by Karthik Yash

புதுச்சேரி, ஆக. 3: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா ஒரத்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல்(48), விவசாயி. இவரது மகள் பவித்ரா (21). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கள்ளிப்பட்டு ஏ.கே. குச்சிப்பாளையத்தில் வசிக்கும் உறவினரான சரத்குமார் (26) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 5ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு தனது புதுமாப்பிள்ளையுடன் பவித்ரா குச்சிப்பாளையத்தில் வசித்தார். இதனிடையே திருமணமான நாள் முதல் புதுமண தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஜூன் 26ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சரத்குமார், ஒரு மாதத்திற்குபின் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புதுமண தம்பதியர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இருவரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே கடந்த 31ம் தேதி முத்துவேலின் உறவினரான புதுச்சேரி, சண்முகாபுரத்தில் வசிக்கும் சாந்தி என்பவரின் வீட்டிற்கு பவித்ராவை அழைத்துவந்த சரத்குமார், அவரை அங்கு விட்டுவிட்டு சென்று விட்டாராம். இது பற்றி முத்துவேலுக்கு சாந்தியும், அவரது மகள் புஷ்பலதாவும் தகவல் தெரிவித்தனர்.மறுநாள் காலை அனைவரும் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த புதுப்பெண் பவித்ரா அங்கிருந்து மாயமானார்.

வெளியே சென்று வீடு திரும்பிய சாந்தியும், அவரது உறவினர்களும் பவித்ராவை காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி முத்துவேலுக்கு தகவல் தெரிவித்த அவர்கள், பல இடங்களில் பவித்ராவை தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் முத்துவேல் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குபதிந்த எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார் காணாமல்போன புதுப்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவம்: இதேபோல் சண்முகாபுரத்தில் 17 வயது மாணவி கடத்தப்பட்ட நிலையில், அவரது தாய் அளித்த புகாரின்பேரில் சிறுமியையும் மீட்பதற்கான நடவடிக்கையில் மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi