Tuesday, November 28, 2023
Home » திண்டிவனம் அருகே பரபரப்பு வயல்வெளியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

திண்டிவனம் அருகே பரபரப்பு வயல்வெளியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

by Lakshmipathi

*கொலையா? போலீசார் விசாரணை

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வயல்வெளி பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலத்தை மீட்ட போலீசார், கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த சிங்கனூர் ஏரிக்கரை அருகே உள்ள வயல்வெளி பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மற்றும் திண்டிவனம் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் ஆகியோர் பெண் சடலத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர்.

மேலும் தடய அறிவியல் நிபுணர் சுரேஷ், கைரேகை நிபுணர்கள் தட்சிணாமூர்த்தி மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர். பின்னர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்தும், வயல்வெளியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அழுகிய நிலையில் பெண் சடலமாக கிடந்ததால், பாலியல் தொந்தரவு அளித்து, யாரேனும் கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?