சென்னை: சென்னை பெருநகரில் கடந்த 2 வாரங்களில் 89 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜன.1 முதல் மே 26 வரை மொத்தம் 585 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் 89 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.