பெங்களூரு: காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணை முன் முன்னாள் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜகவினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரை நிறுத்தாவிடில் யாத்திரை நடத்தப்படும் என்று கர்நாடக பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.