மதுரை: தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களால் நடத்தப்படும் மாணவர் விடுதிகள் உரிமம் பெற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு விடுதிகள் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் உரிமம் பெறுவது கட்டாயம். மாணவ, மாணவியருக்கான விடுதிகளுக்கு ஜூலை மாத இறுதிக்குள் உரிமம் பெற்றிட விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.