சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மும்பை நோக்கி சென்ற லோக்மான்ய திலக் ரயிலில் பேசின் பிரிட்ஜ் அருகே சென்ற போது விபத்துக்குள்ளானது. ரயில் எஞ்சினில் ஏற்பட்ட தீ விபத்து ஒரு மணி நேரத்திற்கு பின் அணைக்கப்பட்டுள்ளது. விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பில்லை. உயர் அழுத்த மின் கம்பியில் ஏற்பட்ட உரசல் காரணமாக தீ விபத்து என தகவல் வெளியாகியுள்ளது.