புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைகளை திருடிய வங்கியின் பொறுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். அடகு வைத்த 90 சவரன் நகைகளை திருடிய வழக்கில் கதிரவனை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். வங்கியில் அடகு வைத்த நகைகளை வாடிக்கையாளர் கேட்டபோது அதிகாரிகள் திருடியது விசாரணையில் அம்பலமானது.