சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்து இல்லாத விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என சேனை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது.
* நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும்
* மெரினா கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது
* தனியார் விடுதிகளில் உள்ள நீச்சல் குளங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பு
* புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்க அனுமதி கிடையாது
* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், சாகசங்களில் ஈடுபடுவோரின் வாகன ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்
* சென்னை மாநகரம் முழுவதும் தானியங்கி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது
* குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தகவலின் அடிப்படையில் உடனடி நடவடிக்கை
* சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு 1800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் – என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.