கோடைகாலம் நெருங்கிவிட்டது என்னதான் நாமும் திட்டமிட்டு அதற்கென தண்ணீர் கேன்கள் வாங்கி வைத்துபருகினாலும் போதுமான நீர் மட்டும் குடிப்பதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதற்கு காரணம் நம் உணவுப் பழக்க வழக்கம், சரியான உடற்பயிற்சி இன்மை, சிறுநீரகத்தை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்ற புரிதல் இல்லாததுதான். எளிமையான பல வகைகளில் நம் சிறுநீரகத்தை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளலாம். நமது உடலில் சிறுநீரகங்கள் தான் பெரும் பங்கு ஆற்றுகின்றது. ரத்தத்திலுள்ள யூரியா போன்ற கழிவுப் பொருட்களை பிரித்தெடுத்து நீருடன் சேர்த்து சிறுநீராக வெளியேற்றுகிறது. எனவே அதனை நல்ல முறையில் பராமரிப்பது அவசியம். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும் இயற்கை முறை வீட்டு மருத்துவம் பற்றி இங்கு காணலாம்.
எலுமிச்சை – 2 துண்டு,
கொத்தமல்லி – சிறிதளவு (தண்டுடன்),
சீரகம் – 1 ஸ்பூன்.
எலுமிச்சை பாதி அளவு எடுத்துக் கொண்டு அதனை சிறு சிறு துண்டு
களாக வெட்டிக் கொள்ளுங்கள். கொத்தமல்லியை தண்டுடன் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். சீரகம் 1 ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள்.
செய்முறை: மூன்றும் இந்த விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் 250 மில்லி அளவு நீரை எடுத்துக்கொண்டு அதில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 10 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீரின் அளவு பாதியாக குறையும் அளவிற்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு வடிகட்டி நன்றாக ஆறவைத்து குடிக்க வேண்டும்.
குறிப்பு: இந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த பின்பு 1 மணி நேரம் கழித்து தான் காலை உணவை உண்ண வேண்டும்.உடல் சோர்வு, ரத்தம் சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து நான்கு நாட்கள் குடிக்க வேண்டும். அதன் பின்பு மாதம் 1 முறை குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாரம் மூன்று நாட்கள் குடிக்கலாம். ஒரு சிறிய துண்டு இஞ்சியை அதனுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. தேவைப்பட்டால் குடிப்பதற்கு முதல் 1 ஸ்பூன் தேனை சேர்த்துக்கொள்ளலாம்.அஜீரணக் கோளாறை போக்கும். உடல் எடையை குறைக்கும். வாயுத் தொல்லையை போக்கும். சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.
முக்கிய குறிப்பு: 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.
எலுமிச்சையின் மற்ற பயன்கள்
தினமும் எலுமிச்சைச் சாறு குடிப் பதன் மூலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிறுநீர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சைப் பழத்தை சிறிதாக நறுக்கி கடிபட்ட இடத்தில் தடவ வேண்டும். பூச்சிக்கடியால் ஏற்பட்ட அலர்ஜியை இது குறைக்கும்.எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மைகொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.எலுமிச்சைப் பழச்சாறை இளஞ்சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்னைகள், குமட்டல் வாந்தி, போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணியாக செயல்படுகிறது.தினமும் ஏதேனும் ஒரு வகையில் எலுமிச்சைச் சாறை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.
– கவிதாபாலாஜிகணேஷ்