சென்னை: 49 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பதவி மூப்பு அடிப்படையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மூத்த ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியர்களாக நியமித்து பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.