சென்னை: வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக கையாண்டதாக ஒன்றிய அரசின் குழு பாராட்டி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒன்றியக் குழுவின் பாராட்டே தமிழ்நாடு அரசு திறமையாக செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிர்வாகம் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் உள்ளது என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.