டெல்லி: தேர்தல் களத்தில் பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் மூலம் வெற்றி பெற நினைக்கிறார் என்று இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றியுள்ளார். இரு மாநில முதலமைச்சர்களை சிறையில் தள்ளி பிரதமர் மோடி மேட்ச் ஃபிக்சிங் செய்துள்ளார். தேர்தலில் எதிர்க்கட்சிகளை போட்டியிட விடாமல் செய்வதுதான் பாஜகவின் வேலை. இந்தியர்களின் குரலை யாராலும் ஒடுக்கவோ, நசுக்கவோ முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.