சென்னை: முன்னாள் டிஜிபி ரங்கசாமி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் டிஜிபி ரங்கசாமி மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். ரங்கசாமி பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.