டெல்லி: இந்திய விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்களை வாங்க ஆர்டர்கள் கொடுத்துள்ளன என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் விமான போக்குவரத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில் விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். உதான் திட்டத்தின் கீழ் 550 தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உதான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.