மதுரை: மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள பெரிய கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடைபெற்றது. மீன்பிடி திருவிழாவில் உபகரணங்களை கொண்டு நாட்டு வகை மீன்களை பிடித்து பொதுமக்கள் உற்சாகம் அடைந்தனர்.
Lavanya
இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்; ரூ.9,000 கோடி முதலீடு செய்கிறது டாடா மோட்டார்ஸ்
ராணிப்பேட்டை: உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது.
தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர்
உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது. டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி செய்ய உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டையில் புதிதாக அமையும் டாடா மோட்டார்ஸ் ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் ரூ.9,000 கோடி முதலீடு
தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர் மாநாட்டில் டாடா மோட்டார்ஸ் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் ஆலை அமைக்கிறது. டாடா மோட்டார்ஸ் ஆலை மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கணிசமான ஊதியத்துடன் கூடிய தரமான வேலை கிடைக்கும்.
சொகுசு கார் உற்பத்தி கேந்திரமாகும் தமிழ்நாடு
அமெரிக்காவின் டெட்ராய்டு நகர் போல ராணிப்பேட்டையை சுற்றி ஏராளமான வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் அமையும். வாகன தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாகும். ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற உயர் ரக சொகுசு -காச்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன. ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் முழுமையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை. பிரிட்டன், சீனா, பிரேசில், ஸ்லோவாக்கியா போன்ற நாடுகளில் ஜே.எல் ஆர். கார் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. தற்போது இந்தியாவில் விற்பனையாகும் ஜே.எல்.ஆர். கார்கள் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகின்றன.
தமிழ்நாட்டில் 2 லட்சம் ஜேஎல்ஆர் கார்கள் தயாரிப்பு
ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை தமிழ்நாட்டில் தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
தேவையானவை
சிவப்பு அரிசி – ½ கப்
தேங்காய் பால் – 1 கப்
ஏலப்பொடி – 1 சிட்டிகை
நெய் – 2 டீஸ்பூன்
நட்ஸ் பவுடர் – 1 டீஸ்பூன்
பாலிஷ் செய்யப்படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் – சுவைக்கு ஏற்ப
செய்முறை
அரிசியை இரவு முழுவதும் ஊற விட்டு, பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக விட வேண்டும். வெந்த அரிசியை ஆற வைத்து, பின்னர் மிக்ஸியில் கொர கொரவென்று அரைத்துக் கொள்ளவும். வாணலில் நெய் விட்டு அரைத்த வற்றை சேர்த்து தேங்காய் பால் ஊற்றி, நட்ஸ் பவுடர், ஏலப்பொடி, தேவையான பாலிஷ் செய்யப் படாத சர்க்கரை அல்லது டேட்ஸ் சிரப் ஊற்றி கலக்கவும். சூடானதும் இறக்கி விடலாம்.
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – 2-3 (வேக வைத்து, தோலுரித்து, மசித்தது)
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்ணெய் சேர்த்து உருக வைக்க வேண்டும்.பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னியமாக வதக்க வேண்டும். பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா ரெடி!
தேவையான பொருட்கள் :
கொய்யா பொடியாக நறுக்கியது – 250 கிராம்
இஞ்சி நறுக்கியது – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் நறுக்கியது – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் நறுக்கியது – 2 டீஸ்பூன்
உப்பு – 1/2 தேக்கரண்டி
செய்முறை :
முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் கொய்யா, மல்லி இலைகள், சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக் கொள்ளுங்கள். இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை பாத்திரத்தில் மாற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டி, தோசை இட்லியுடன் வைத்து சாப்பிட்டு பாருங்க. மற்ற சட்னியை எல்லாம் மறந்து விடுவீர்கள். அந்த அளவிற்கு சுவையானதாக இருக்கும். குழந்தைகளுக்கு துவர்ப்பு சுவை பற்றி சொல்லவும், சுவைத்து பார்க்க கொடுக்கவும் என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது இதை நினைவில் கொள்ளுங்கள். இந்த சட்னி கொய்யாவின் இயற்கையான துவர்ப்பு சுவையுடன், உவர்ப்பு, காரத்துடன் சுவையாக இருக்கும்.
பஜாஜ் நிறுவனம் பல்சார் என்250 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 249.07 சிசி ஆயில் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 24.5 பிஎஸ் பவரையும், 21.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் புதிய கிராபிக்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் வசதி உள்ளது. போன் அழைப்புகள், பைக்கை சர்வீஸ் செய்ய நினைவூட்டல் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. ரெயின், ரோடு, ஆஃப் ரோடு என்ற மூன்று ஏபிஎஸ் மோட்கள், அகலமான பின்புற டயர்கள் உள்ளன. மேம்படுத்தப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளின் ஷோரூம் வலை சுமார் ரூ.1.51 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.
ஜீப் நிறுவனம் காம்பஸ் நைட் ஈகிள் காம்பஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த எஸ்யுவியில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 167 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9 ஸ்பீடு டார்க்யூ கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. ஏற்கெனவே சந்தையில் உள்ள காம்பஸ் லாங்கிடியூட் மற்றும் லிமிடெட் வேரியண்ட்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.20.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவு ஏற்கெனவே துவங்கி விட்டது. கருப்பு நிறத்தில் வெளியாகியுள்ள இந்த காரில் கிரில், கிரில் ரிங், கருப்பு அலாய் வீல்கள், கருப்பு டூயல் டோன் ரூப் என கருப்பு தீம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.