Thursday, May 2, 2024
Home » மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு 4 அமைச்சர்கள் பங்கேற்பு

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி இன்று துவங்கியது: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு 4 அமைச்சர்கள் பங்கேற்பு

by Dhanush Kumar

கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் 60வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. லட்சம் மலர்களில் உருவாக்கப்பட்ட மலர் உருவங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதில் 4 அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கோடை வாசஸ்தலங்களில் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி விழா மற்றும் கோடை விழா நடைபெறும். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அரசு துறைகள் இணைந்து இந்த விழாக்களை நடத்தும். இந்த ஆண்டு 60வது மலர் கண்காட்சி விழா கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இன்று கோலாகலமாக துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், பல லட்சம் மலர் கொத்துக்கள் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒரு லட்சம் காரனேஷன் மலர்களைக் கொண்டு ஒட்டக சிவிங்கி, முயல், வாத்து, மலர்தொட்டி, ஐஸ்கிரீம், டோனி டீசர்ட் உள்ளிட்ட 6 உருவங்கள் பல வண்ணங்களில் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் காய்கறிகளால் அமைக்கப்பட்டுள்ள காட்டுமாடு, வரிக்குதிரை உருவம் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்தது.

ஏற்றுமதி ரகம் வாய்ந்த பல வண்ண மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 35 வகையான அல்லிசம், ஆந்தூரியம், ஆஸ்டர், பால்சம், கேலண்டுலா, காஸ்மோஸ், கோரியாப்சிஸ், கேண்டிடப்ட், செல்லோசியா, பால்போஸ், லிசானோ கிலாசம், டேலியா, ஹைலிகோனியா, ஜின்ஜர் லில்லி உள்ளிட்ட மலர்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. இவற்றை காண சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கொடைக்கானல் பூங்காவில் பூத்துள்ள ஒரு கோடி மலர்களையும் இங்கு வந்த சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இவ்வளவு மலர்களும் ஒரே இடத்தில் காண்பது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 3வது நாள் நடைபெறும் மலர்கண்காட்சி நிறைவு விழாவில் கண்காட்சியில் இடம்பெற்ற சிறந்த மலர் கொத்துக்களை வைத்து அவர்களுக்கும், அதேபோல மலர் கண்காட்சி ஒட்டி நடைபெற்ற சிறந்த மலர் தோட்டங்கள் சிறந்த காய்கறி தோட்டங்கள் ஆகியவற்றை வைத்திருப்பவர்களுக்கு சுகர் கோப்பைகளும் பரிசாக வழங்கப்படுகிறது. முன்னதாக 60வது மலர் கண்காட்சியை அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், சக்கரபாணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

 

You may also like

Leave a Comment

nine − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi