குன்றத்தூர்: மாங்காடு அருகே கோவூர் பிரதான சாலையில் பேருந்து நிலையம் அருகே நேற்றுமுன்தினம் ஒரு ஆட்டோவில் அமர்ந்து 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று மாறு வேடத்தில் கண்காணித்தனர். அப்போது, ஆட்டோவில் கஞ்சா விற்ற கும்பலை மடக்கிப்பிடித்தனர். சோதனை செய்தபோது, ஆட்டோ சீட்டுக்கு அடியே கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். விசாரணையில், கோவூரை சேர்ந்த மணி (28), சிலம்பரசன் (27) என்பது தெரியவந்தது. மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2.50 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்….