காரைக்குடி, ஆக.13: காரைக்குடி அருகே கல்லல் வெற்றியூர் அரசு பள்ளியில் திருக்குறள் நெறி பரப்பும் தன்னார்வலர்களால் திருக்குறள் நூல் வழங்கும் விழா நடந்தது. முதுகலை தமிழாசிரியர் உமாசேகரர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் உதயசங்கர் தலைமை வகித்தார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் புலவர் கா.காளிராசா, திருக்குறள் பரப்பநர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓவிய ஆசிரியர் பாலகணேசன் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர் சகாயரத்தினக் குமார் நன்றி கூறினார்.