சிவகங்கை, ஆக.13: திருப்புவனம் நெல்முடிகரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடன் தொகை ரூ.10 லட்சத்தை மகளிர் குழு உறுப்பினர் ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.1லட்சம் வழங்கும் வகையில் காசோலைகளை திருப்புவனம் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கள மேலாளர் செல்வராஜ். சரக மேற்பார்வையாளர் கருப்புசாமி, சங்க செயலாளர் துரை, காசாளர் பழனிச்சாமி மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.