சென்னை: கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கருவின் பாலினத்தை ஸ்கேன் செய்யும் மையங்கள், மருத்துவமனைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். யூடியூபர் இர்பான் வெளியிட்ட வீடியோவை உலக முழுவதும் பலர் பார்த்து வீடியோவை பகிர்த்துள்ளனர். இத்தகைய செயலால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.