மதுரை, ஜன.25: மதுரை உலகனேரியைச் சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிற்றுண்டி சாலை (கேண்டீன்) செயல்படுகிறது. இங்கு குட்கா, புகையிலை போன்ற போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் உத்தரவில் கூறியிருப்பதாவது, மனுதாரர் குறிப்பிடும் பகுதிக்கு மதுரை எஸ்பி நேரில் சென்று ஆய்வு செய்து ஜன.31ல் அறிக்கையளிக்க வேண்டும். முறைகேடு நடந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
கேண்டீனில் குட்கா விற்பனையா? எஸ்பி ஆய்வு செய்ய உத்தரவு
previous post