உசிலம்பட்டி,ஜன.25: உசிலம்பட்டியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் தங்கப்பாண்டியன் முன்னிலை வகித்தார். திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நிர்வாகிகள் ஆலாசனைக்கூட்டம் நடைபெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் தேர்தல் பணிகள் செய்வது குறித்தும், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அஜித் பாண்டி, எஸ்விஎஸ் முருகன், எம்பி பழனி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் சுதாகரன், முத்துராமன், வழக்கறிஞர் சரவணக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் வீரமணி, சந்திரன், சுபாஷ், செல்வி, பழனியம்மாள், சோபனா தேவி, முருகன், பிரியா, சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.