சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி உள்பட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.