தென்காசி: பழைய குற்றால அருவியில் குளித்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய நெல்லையை சேர்ந்த சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். அருவியில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவன் அஸ்வினின் சடலம் மீட்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.