மதுரை, ஜன. 25: மதுரை பாத்திமா கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா நடந்தது. மதுரை பாத்திமா கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா கல்லூரி முதல்வர் ஜி.செலின் சகாயமேரி தலைமையில் நடந்தது. வாடிப்பட்டி அருகே உள்ள டி.ஆண்டிபட்டியில் நடந்த இவ்விழாவில், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பா.மேக்தலின் வெர்ஜினி வரவேற்றார்.
பேராசிரியர் சாமுவேல் அன்புச்செல்வனை கல்லூரி முதல்வர் கவுரவித்தார். விழாவில் ஆ.மீனாள் ஆசைத்தம்பி (ஊராட்சி மன்றத் தலைவர் டி.ஆண்டிப்பட்டி), முகிலன் (ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கட்டக்குளம்), ராமசந்திரன் (துணைத்தலைவர் டி.ஆண்டிப்பட்டி), செல்வம் (டி.ஆண்டிப்பட்டி) ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் 8 கல்லூரி அணிகளுடன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.