ஜெயங்கொண்டம், மே 16: உடையாளர்பாளையத்தில் பெண்ணிடம் தகராறு செய்தவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பைபாஸ் ரோட்டை சேர்ந்த ராஜேந்திரன் மகள் கல்பனா(21). அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் மகன் யோகஸ்வரன் (21). இவர் கல்பனா இடம் பிரச்சனை செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் கல்பனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து யோகஸ்வரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.