இந்தூர்: நேபாள பிரதமர் புஷ்பகமல் தஹால் பிரசந்தா நான்கு நாள் பயணமாக கடந்த புதனன்று இந்தியா வந்தார். இதனை தொடர்ந்து இரண்டு நாள் பயணமாக நேற்று காலை 11 மணிக்கு பிரதிநிதிகள் குழுவுடன் மத்தியபிரதேசம் வந்தார். இந்தூர் விமான நிலையத்தில் வந்திறங்கிய நேபாள பிரதமரை மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் வரவேற்றார். தொடர்ந்து உஜ்ஜைனியில் உள்ள 12 ஜோதிலிங்கங்களில் ஒன்றான மாகாளேஸ்வர் கோயிலுக்கு பிரதமர் பிரசந்தா புறப்பட்டு சென்றார். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் மாநில ஆளுநர் மங்குபாய் மற்றும் நேபாள பிரதமர் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi