திருச்சி: துவரங்குறிச்சியில் பாலியல் தொல்லை தந்த விஷ்வ இந்து பரிஷித் பிரமுகர் மீது வழக்கு பதிய கோரி பெண் மனு அளித்துள்ளார். காவல்துறை தரப்பில் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி அளித்துள்ளது. துவரங்குறிச்சியை சேர்ந்த மணிமேகலை என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில் நீதிபதி நாகார்ஜுனா அணையிட்டுள்ளார்.