Thursday, May 2, 2024
Home » காதல் மனைவியை கொல்ல முயற்சி: கணவர் உட்பட 5 பேர் கைது

காதல் மனைவியை கொல்ல முயற்சி: கணவர் உட்பட 5 பேர் கைது

by Suresh

திருப்பூர்: திருப்பூர் அருகே காதல் மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்ற கணவர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டுபாளையம் செண்பாவல்லம் ரோடு, பொன்னேகவுண்டன் புதூரை சேர்ந்தவர் மணிமாறன் (38). இவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மாங்கனி (35) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின்னர் இருவரும் தங்கள் பெற்றோரிடம் எந்த தொடர்பும் இல்லாமல் வசித்து வந்தனர்.

கடந்த 15 நாட்களுக்கு முன்பு மணிமாறன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட மணிமாறனின் தந்தை ஆடலரசு தன் மகனைப் பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். மாமனார் வந்ததை விரும்பாத மாங்கனி அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மணிமாறன் தனது மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன் காரணமாக மனைவியை தீர்த்துக்கட்ட மணிமாறன் முடிவு செய்தார். இதற்காக தனது நண்பர்களான வேலு (34), விவேகானந்தன் (35), முனிரத்தினம்(37) ஜான்ஜோசப் (45) ஆகியோருடன் சேர்ந்து மணிமாறன் திட்டம் தீட்டினார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாங்கனி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது மணிமாறன் வீட்டிற்கு நான்கு பேரும் வந்தனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாங்கனியை தலையணையால் அமுக்கி கொலை செய்ய முயன்றனர். மாங்கனி கூச்சலிட்டதால் அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து மாங்கனி அளித்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்தி மணிமாறன், வேலு, விவேகானந்தன், முனிரத்தினம், ஜான் ஜோசப் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் மனைவியை கணவனே தனது நண்பர்களை வைத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

20 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi