விழுப்புரம்: கோட்டக்குப்பம் சோதனை சாவடியில் பணிபுரிந்த 3 தலைமை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சோதனையில் கைப்பற்றிய மதுபானங்களை மதுவிலக்கு அமல் பிரிவில் ஒப்படைக்காமல் தங்களிடமே வைத்து கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமை காவலர்கள் வினோத், முரளி, முத்தரசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. சசாங் சாய் உத்தரவிட்டுள்ளார்.