சென்னை: துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை ஆளுநரின் ஒப்புதல் இன்றி அமைக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்க தேர்வுக்குழுவை தமிழ்நாடு அரசு நியமித்ததற்கு ஆளுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்பப் பெற உயர்கல்வித்துறை முதன்மை செயலருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.