திருவள்ளூர்: வயலூர் கிராமத்தில் நிலத் தகராறில் 2 பேரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய ரவுடிக்கு போலீஸ் வலைவீசிவருகின்றனர். வயலூரில் ரஞ்சித், அவரது மாமியார் ஈஸ்வரியை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிவிட்டு ரவுடி கார்த்திக் தலைமறைவாகியுள்ளார். காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.