தமிழ்நாட்டில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பருத்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் ஜவுளித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நூற்பாலைகளை நடத்தி வரும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.