திருப்பூர்: அரசு அனுமதியை மீறி சிறப்புக் காட்சிகளை திரையிட்ட திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தீபாவளி விடுமுறையில் அனுமதியின்றி சிறப்புக் காட்சி வெளியிட்டதாக வந்த புகாரில் தியேட்டருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் சுப்பிரமணியனின் சக்தி சினிமாஸ் திரையரங்கிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.