Wednesday, November 29, 2023
Home » மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது!: பாஜகவின் வாக்குறுதிகளுக்கு முன்பு காங்கிரஸின் போலி வாக்குறுதிகள் எடுபடாது.. பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு..!!

மக்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை உள்ளது!: பாஜகவின் வாக்குறுதிகளுக்கு முன்பு காங்கிரஸின் போலி வாக்குறுதிகள் எடுபடாது.. பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு..!!

by Kalaivani Saravanan

போபால்: பாஜகவின் வாக்குறுதிகளுக்கு முன்பு காங்கிரஸின் போலி வாக்குறுதிகள் எடுபடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் பெதுல் நகரில் விஜய் சங்கல்ப கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாஜகவின் சாதனைகள் மீது மத்திய பிரதேச மக்கள் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளனர். காங்கிரஸின் ஊழலையும், கொள்ளையடிப்பதையும் மத்தியப் பிரதேசத்தின் லாக்கரைத் தொடாமல் தடுப்பதற்காகத்தான் இந்தத் தேர்தல் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

காங்கிரஸின் உள்ளங்கைகளுக்குத் திருடவும், கொள்ளையடிக்கவும் தான் தெரியும் என்றார். நவம்பர் 17ம் தேதி தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர்களின் நடவடிக்கைகள் அம்பலமாகி வருகிறது. இன்று, ஒட்டுமொத்த மத்தியப் பிரதேசத்தில் இருந்து காங்கிரஸ் தோல்வியை ஏற்றுக்கொண்டதாகவும், இப்போது அதிர்ஷ்டத்தை நம்பியிருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, சில காங்கிரஸ் தலைவர்கள் வீட்டிலேயே அமர்ந்திருக்கிறார்கள். வெளியே செல்லவே மனமில்லை. மக்களிடம் என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.

பாஜகவின் வாக்குறுதிகளுக்கு முன்பு காங்கிரஸின் போலி வாக்குறுதிகள் எடுபடாது என்பதை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். பல ஆண்டுகளாக காங்கிரஸ் பழங்குடியினரிடம் வாக்கு சேகரித்து, பொய்களை கூறி வாக்குகளை பெற்றனர். சாலைகள், மின்சாரம், தண்ணீர், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற வசதிகள் இல்லாமல் பழங்குடியினரை காங்கிரசு வைத்தது. காங்கிரஸ் அவர்களின் வாக்குறுதிகளை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் ஆட்சி அமைத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் அவர்களால் முடியவில்லை. அதை செய்யாமல் கொள்ளையடிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். பழங்குடியினரின் நலனுக்கு பாஜக முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனால்தான் பழங்குடியின மகள் திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்து நாட்டை வழிநடத்துகிறார் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பரப்புரையில் தெரிவித்தார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?