சென்னையில் நேற்று நடந்த கேலோ இந்தியா மகளிர் கபடி பைனலில் தமிழ்நாடு – அரியானா அணிகள் மோதின. அதில் அரியானா அணி 40-33 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. தமிழ்நாடு அணி வெள்ளிப் பதக்கம் பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா பதக்கங்களை வழங்கினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை இயக்குனர் சதீஷ்குமார் உடன் இருந்தார். ஆண்கள் கபடி பைனலில் அரியானா 34-28 என்ற புள்ளிக்கணக்கில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. ராஜஸ்தான் வெள்ளி, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அணிகள் வெண்கலம் வென்றன.
தமிழ்நாடு பெண்களுக்கு வெள்ளி: கேலோ இந்தியா கபடியில்
previous post