* குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறை எண்ணெய் போட்டு வந்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.
* பிளாஸ்டிக் மலர்களின் மேல் தூசி படிந்தால் அவற்றை ஒரு பளாஸ்டிக் கவரில் போட்டு, கவரில் ஒரு கைப்பிடி உப்பையும் போட்டு நன்கு குலுக்கவும். பின்னர் நல்ல சோப்பு நீரில் கழுவிவிட்டால் இடுக்குகளில் உள்ள தூசிகூட சுத்தமாகப் போய்விடும்.
* பிளாஸ்கில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ எதையும் ஊற்றுமுன் சிறிது தண்ணீர் விட்டு அலம்பிவிட்டு ஊற்றினால் பிளாஸ்க் நீண்ட நாள் உழைக்கும்.
* பாட்டில் மூடி திறப்பதற்கு கடினமாக இருந்தால் கழுத்துப் பகுதியில் சிறிது எண்ணெய், உப்பு கலந்து தேய்த்தால் எளிதாகத் திறக்க வரும்.
* பாட்டிலின் கார்க்கை திறக்க கடினமாக இருந்தால் வெந்நீரில் நனைத்த ஒரு துணியை பாட்டிலின் கழுத்தில் சுற்றி வைக்கவும். பின்னர் கார்க்கின் மீது குளிர்ந்த நீரின் சொட்டுக்களை விடவும். பாட்டில் விரிந்து கார்க் சுருங்கி எளிதாக எடுக்கமுடியும்.
* ரப்பர் பேண்டுகளை வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரை தூவி வைத்தால், அவை ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாது.
v துருப்பிடித்த ஆணிகளை எளிதாக கழற்றுவதற்கு அந்த ஆணிகளின் மீது சிறிது வினிகரை ஊற்றி சில நிமிடங்கள் ஊறவைத்து பின் கழற்றினால் எளிதாக வந்துவிடும்.
* கண்ணாடி ஜன்னல்களிலுள்ள பெயிண்ட்களைப் போக்க சூடான வினிகரைப் பயன்படுத்தலாம்.
* பிரம்பு நாற்காலிகள் தொய்ந்து போகாமல் இருக்க, முதலில் சிறிது சோப்பு நீரால் நன்கு துடைத்து, பிறகு இளஞ்சூடான உப்பு நீரால் துடைத்து, வெயிலில் காய வைத்தால் பழைய வடிவத்திற்கு வந்துவிடும்.
* வீட்டிலுள்ள வெண்கலம், பித்தளை மற்றும் தாமிரப் பாத்திரங்களை எலுமிச்சைத் தோலுடன் சாம்பலை சேர்த்து துலக்கினால் பளபளவென்று மின்னும். அவற்றை காய்ந்த துணி கொண்டு துடைத்து வைத்தால் கறை படாமல்ஜொலிக்கும்.
* தோல் பெட்டிகளின் மேல் சிறிது எலுமிச்சைச்சாறை ஒரு பழைய துணியால் நன்கு தேய்த்தால் புதிது போல் மின்னும்.
* தோல் பர்ஸ், பெட்டி போன்றவைகளின் மேல் சிறிது மெழுகைத் தடவி ஒரு மெல்லிய துணியால் தேய்த்தால் புதிது போல் பளபளக்கும்.
* புத்தகங்களின் மேல் எண்ணெய் கறை பட்டால், கறைபட்ட இருபுறத்திலும் டால்கம் பவுடரை தடவி ஒரு மெல்லிய துணியால் துடைத்தால் கறை மறைந்து விடும்.
* அலமாரியில் உட்பக்கத்தை வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடித்தால் நல்ல வெளிச்சமாக இருக்கும். இருட்டைத் தேடி வரும் பூச்சிகளும் சேராது.
* ஊதுபத்தியைத் தண்ணீரில் இலேசாக நனைந்து உலரவிட்டுப் பற்ற வைக்கவும். ஊதுபத்தி நிதானமாக எரியும். அதிகமான மணம் வீசும்.
– இந்திராணி தங்கவேல்
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
previous post