Thursday, May 16, 2024
Home » சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம்: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

by Suresh
Published: Last Updated on

சென்னை: சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் கிளாம்பாக்கம் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை என பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.

சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை யொட்டி தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டது. இதர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வந்தன.

இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார். ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டுவதற்கு அரசு அளித்த கால அவகாசம் இன்று முடிவடைகிறது. இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுக்காப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியுள்ளதாவது; “கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த உரிய வசதிகள் இல்லை.

2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இன்று மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது.

கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவது பற்றி எங்களுடன் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தேவை” என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் பேட்டியளித்துள்ளார்.

You may also like

Leave a Comment

four × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi