Tuesday, May 28, 2024
Home » ஐகோர்ட், மதுரை கிளையில் நடந்த லோக் அதாலத்தில் 79 வழக்குகளில் தீர்வு

ஐகோர்ட், மதுரை கிளையில் நடந்த லோக் அதாலத்தில் 79 வழக்குகளில் தீர்வு

by Ranjith

சென்னை: உயர் நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் மொத்தம் பட்டியலிடப்பட்ட 767 வழக்குகளில் 454 வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், 313 வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற சட்ட உதவி குழு இந்த லோக் அதாலத்தை நடத்தியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், கே.குமரேஷ்பாபு, பி.பி.பாலாஜி, சக்திவேல், ராஜசேகர் ஆகியோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், சி.குமரப்பன், எஸ்.ஆனந்தி (ஓய்வு) ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர். பட்டியலிடப்பட்ட 767 வழக்குகளில் நேற்று 79 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.11, 24, 97,578 பைசல் செய்யப்பட்டது.

You may also like

Leave a Comment

thirteen − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi