கோவை: கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த அலுமினிய வியாபாரி ரவி (60) என்பவர் சிங்கப்பூரில் வசித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான அலுமினிய பொருட்களை ரவி அனுப்பி வைத்துள்ளார்.அதற்கு அவர் பணம் தரவில்லை. இதற்கிடையே கண்ணனின் ஊரைச் சேர்ந்த அமமுக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளரான பூலோக பாண்டியன் (52), ரவியை தொடர்பு கொண்டு,‘கண்ணனி ன் சொத்துகள் அடமானத்தில் உள்ளது. 13 லட்ச ரூபாய் கொடுத்தால் அவரது சொத்துக்களை மீட்டு உங்க பணத்தை கொடுத்து விடுகிறேன் என கூறி ரூ.13 லட்சம் பெற்று மோசடி செய்து உள்ளார். இதையடுத்து பூலோக பாண்டியனை போலீசார் கைது செய்தனர் .