சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் டரன் டரன் மாவட்டத்தில் போதை கடத்தல் கும்பலை சேர்ந்த சுர்ஜித் சிங் மற்றும் பிசோரா சிங் ஆகிய இருவரை கடந்த ஆண்டு போலீசார் கைது செய்தனர். இதில் போதை கும்பலை சேர்ந்தவர்களிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக டிஎஸ்பி லக்பீர் சிங் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த வழக்கில் டிஐஜி இந்தர்பீர் சிங்கின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தர் பீர் சிங் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.