தேனி: தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட ஊரடி, ஊத்துக்காடு உள்பட 10 கிராம மக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மலைகிராம பகுதிகளுக்கு சாலை வசதி செய்து தரவில்லை எனக்கூறி சோத்துப்பாறை அணை அருகே மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மலைகிராம மக்கள் அறிவித்துள்ளனர்.