புதுச்சேரி: புதுச்சேரி திருவண்டார்கோவிலை சேர்ந்த வாலிபர், 16 வயது சிறுமியை கடந்த 2021 ஜூன் மாதம் திருக்கனூருக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக அப்போதைய திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கில்டா சத்திய நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் உடனடியாக விசாரித்து வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, எஸ்பி நித்தின் கவுல் விசாரித்து கடந்த சில நாட்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் மெத்தனமாக இருந்தாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலதாமதமாக வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் கில்டா சத்ய நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சம்பள உயர்வை டிஜிபி மனோஜ்குமார் லால் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.