திருப்பூர், மே 27: திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் மீன் வாங்க வந்திருந்தனர். திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் வந்து மீன்களை வாங்கி செல்வார்கள்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடல் மீன்கள் வரத்து கடந்த வாரங்களை விட சற்று குறைவாக காணப்பட்டதால் கடல் மீன்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.