புதுச்சேரி: புதுச்சேரி முழுவதும் இன்புளுன்சா காய்ச்சலால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை பணிகளை மாநில சுகாதாரத்துறை முடுக்கி தீவிரமாக இறங்கி உள்ளது. முதல்கட்டமாக இன்புளுன்சா காய்ச்சல் பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி நேற்று அரசு உத்தரவிட்டுள்ளது.