பந்தலூர்: கேரளா மாநிலம், வயநாடு எம்.பி.யும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி மலப்புரம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்கி வைக்க நேற்று காரில் சென்றார். நீலகிரி மாவட்டம் நாடுகாணி, பந்தலூர், சேரம்பாடி வழியாக அவர் சென்றபோது பந்தலூருக்கு நேற்று மாலை 6.20 மணி அளவில் வந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்ற குழந்தைகள் ‘ராகுல்ஜி, ராகுல்ஜி’ என சத்தமாக அழைத்தனர். இதனை கேட்ட ராகுல்காந்தி காரை நிறுத்தி கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து, ஏராளமான குழந்தைகள் ராகுல்காந்திக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் அவரை வரவேற்றனர். கட்சி நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ராகுல்காந்தி மீண்டும் காரில் ஏறி வயநாடு சென்றார்.
தமிழக எல்லையில் ராகுல்காந்திக்கு உற்சாக வரவேற்பு
previous post