சென்னை: பல்லாவரம் எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமின் கோரிய வழக்கில் பெண் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வீட்டு பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக எம்.எல்.ஏ. மகன் ஆண்டோ மதிவாணன், மருமகள் மர்லினா கைது செய்யப்பட்டனர். தவறாக அளிக்கப்பட்ட புகாரில் கைதாகி 30 நாட்களாக சிறையில் உள்ளதாக இருவரும் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜராகி இருவரின் ஜாமின் மனு குறித்து பதிலளிக்க பெண் அவகாசம் கோரினார்.