இஸ்ரேலின் தாக்குதல் காசாவை தாண்டி ரஃபாவுக்கும் விரிவடைந்துள்ள நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், நார்வே அயர்லாந்து அங்கீகரித்துள்ளன. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஸ்பெயின், நார்வே, அயர்லாந்தில் இருந்து தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றது. ஆலோசனை நடத்துவதற்காக தமது நாட்டு தூதர்களை திரும்ப அழைத்துள்ளதாக இஸ்ரேல் விளக்கமளித்துள்ளது.