Thursday, May 9, 2024
Home » உடல் உறுப்பு தானம் செய்துள்ள அருட்தந்தை பிரான்சிஸ் சேவியருக்கு அரசு மரியாதை :அமைச்சர் அன்பில் மகேஷ்

உடல் உறுப்பு தானம் செய்துள்ள அருட்தந்தை பிரான்சிஸ் சேவியருக்கு அரசு மரியாதை :அமைச்சர் அன்பில் மகேஷ்

by Porselvi

சென்னை : உடல் உறுப்பு தானம் செய்துள்ள அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட பொன்மலைப்பட்டியில் அமைந்துள்ள திரு இருதய அரசு உதவிப்பெறும் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அருட்தந்தை முனைவர் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்துள்ளார்.

தனது உடல் உறுப்புகளை கொடையளித்ததன் காரணமாக தனக்கும், திருவெறும்பூர் தொகுதிக்கும் புகழ் சேர்த்துள்ளார் தலைமையாசிரியர் அருட்தந்தை அவர்கள்.முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. உடல் உறுப்பு கொடையின் காரணமாக, இவ்வுலகில் மீண்டும் பிறக்கவுள்ள தலைமையாசிரியர் பிரான்சிஸ் சேவியர் அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம்! ” என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

3 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi