திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் கல்குவாரியில் மண் சரிந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோடங்கிபாளையத்தில் இயங்கும் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி ஒடிசாவை சேர்ந்த பாபன்சிங் பலியாகியுள்ளார். மண் சரிவில் சிக்கி பலத்த காயமடைந்த மதியழகன் என்பவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.